மருத மரப் பட்டை என்றால் என்ன?

மருதம்,  ஹராட் (டெர்மினாலியா செபூலா) மற்றும் பஹேடா (டெர்மினாலியா பெல்லரிகா) போன்ற டெர்மினாலியாவின் மரபணு மரபுவழி சாகுபடியைச் சேர்ந்த ஒரு பசுமையான மரமாகும். இந்த அலங்கார மரத்தின் மருத்துவ அழகு அதன் உள்ளார்ந்த பட்டையில் உள்ளது, இது இதயத்திற்கான ஒரு டானிக் என்று கருதப்படுகிறது. உண்மையில், இந்த மரத்தை பற்றிய குறிப்புகள் ரிக் வேதாவில் காணப்படுகின்றன. ஆயுர்வேத மருத்துவர்கள் முழுமையான இதய ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்காக மருத மரப் பட்டை-யை பரிந்துரைக்கின்றனர். மருத்துவ ரீதியாக பேசுகையில், இதய நோய்கள், நெஞ்சு வலி, இதய செயலிழப்பு உள்ளிட்ட பல்வேறு இதய நோய்களை குணப்படுத்தும் மருத மரத்தின் பட்டையின் நன்மைகள் பற்றி பரவலாக ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. மருத மரப் பட்டையை வைத்திருப்பது இதயச் சக்ரா (மனித உடலின் ஆற்றல் மையம்) வலுப்படுத்துவதாக நம்பப்படுகிறது. மேலும் அதன் மருத்துவ குணங்கள் மேற்குப் பகுதியின் மூலிகையான ஹாவ்தோர் உடன் ஒப்பிடப்படுகிறது என்று தெரிந்து கொள்வது உங்களை ஆச்சரியப்படுத்தலாம்.

இந்தியாவை சொந்த இடமாக கொண்ட, மருத மரம் பொதுவாக ஆறுகள் மற்றும் நீரோடைகளுக்கு அருகில் காணப்படுகிறது, அது 25 முதல் 30 மீட்டர் உயரம் வரை வளரலாம். மருத மரப் பட்டை மென்மையாகவும் சாம்பல் நிறமாகவும் இருக்கும், ஆனால் இடை இடையே அதில் சில பச்சை மற்றும் சிவப்பு திட்டுகள் காணப்படும். மருத மரத்தின் இலைகள் நீள்வட்டமாக (கிட்டத்தட்ட செவ்வக) இருக்கும். மேலும் அதன் கிளைகள் மீது ஒன்றிற்கொன்று எதிரெதிராக வளரும். மே முதல் ஜூலை வரை இந்த மரத்தின் வெள்ளை நிற பூக்கள் கொத்து கொத்தாக பூக்கும். மருதப் பழம் புதிதாக இருக்கும் போது பச்சை நிறமாக இருக்கும் மற்றும் முதிர்ச்சியடைந்த பின்பு ஒரு மர பழுப்பு நிறமாக மாறும். இந்த பழம் மருத மரத்தை அடையாளம் காண உதவும் அம்சங்களில் ஒன்றாகும்.

உங்களுக்கு தெரியுமா?

டெர்மினாலியா என்பது ஒரு லத்தீன் வார்த்தையிலிருந்து பெறப்பட்டதாகும், அதாவது முனை அல்லது முடிவு என்று பொருள். மருத மரத்தின் கிளைகளின் முடிவில் அதன் இலைகள் வளருவதால் மருத மரம் இவ்வாறு குறிக்கப்படலாம். அர்ஜுனன் என்ற பெயருக்கு வெண்மையானது அல்லது பிரகாசமானது என்று பொருள். அதன் வெள்ளை பூக்கள் அல்லது அதன் பளபளப்பான வெள்ளை பட்டை காரணமாக இந்த மரம் இவ்வாறு பெயர் பெற்றது எனவும் நம்பப்படுகிறது.

மருத மரத்தைப் பற்றிய சில அடிப்படை தகவல்கள்.

  • தாவரவியல் பெயர்டெர்மினாலியா அர்ஜுனா
  • குடும்பம்: கோம்ப்ரேட்டேசியே
  • பொது பெயர்அர்ஜுன், வெள்ளை மருதா
  • சமஸ்கிருத பெயர்அர்ஜூனா, தவாலா, நாடிசர்ஜா
  • பயன்படுத்தப்படும் பகுதிகள்: பட்டை
  • சொந்த பகுதி மற்றும் புவியியல் பரப்பு: மருத மரமானது இந்தியாவிற்கும் ஸ்ரீலங்காவிற்கும் சொந்தமானது ஆனால் இது பங்களாதேஷ், நேபாளம், பாக்கிஸ்தான், இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய பகுதிகளிலும் காணப்படுகிறது.
  • ஆற்றலியல்: மருத மரப் பட்டை பித்தம் மற்றும் கபம் ஆகியவற்றயை குறைக்கிறது அதே சமயம் வாதத்தை அதிகரிக்க செய்கிறது. அதனால் உடலை குளிர்விக்கும் ஒட்டுமொத்த விளைவை இது கொண்டிருக்கிறது.
  1. அர்ஜுன மர மரப்பட்டையின் உடல் ஆரோக்கிய நலன்கள் - Arjuna tree bark health benefits in Tamil
  2. மருத மரப் பட்டையை எப்படி பயன்படுத்துவது - How to use arjuna bark in Tamil
  3. மருத மரப் பட்டை மருந்தளவு - Arjuna bark dosage in Tamil
  4. மருத மர பட்டையின் பக்க விளைவுகள் - Arjuna tree bark side effects in Tamil

அர்ஜுனா சாலிற்கு பல உடல்நல நன்மைகள் உள்ளன ஆனால் மிக முக்கியமாக அது ஒரு இதய ஆரோக்கியத்தின் சாம்பியனாகும். அதன் பல ஆரோக்கிய நலன்களில் சிலவற்றை ஆராயலாம்.

  • இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது: இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பிற மூலிகைகளுடன் இணைத்து மருத மரப் பட்டை வழங்கப்படுகிறது. இது இதய செயலிழப்பு நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் மற்றும் சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
  • அதிரோஸ்கிளிரோஸ்-சை தடுக்கும்: மருத மரப் பட்டை, பாலுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளப்படும் போது, உடலில் கொழுப்பு அளவுகளை குறைக்க உதவுகிறது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆக்ஸிஜனேற்றியாக இருப்பதால், லிப்பிட் பெராக்ஸிடேட்டை தடுக்கிறது, இதையொட்டி அதெரோஸ்லரோஸிஸ் ஆபத்தை குறைக்கிறது.
  • இதயத்திற்கு நல்லது: மருத மரப்பட்டை இதய நோய்களுக்கான முக்கிய இரண்டு ஆபத்து காரணிகளான, கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை குறைகிறது. ஒரு ஆக்ஸிஜனேற்ற மற்றும் உறைவு எதிர்ப்பு முகவராக இருப்பதால், இது பக்கவாதம், மாரடைப்பு மற்றும் வயது தொடர்பான இருதய பிரச்சினைகள் ஆகியவற்றை தடுக்கிறது.
  • ஆண்டிமைக்ரோபியல்: தோல் நோய்க்கிருமிகளின் மிகவும் பொதுவான இரண்டு ஆண்டிபயாடிக் எதிர்ப்பு தடுப்பு வகைகளான, MRSA மற்றும் VRSA ஆகியவற்றிற்கு எதிரான ஆண்டிபயாடிக் நடவடிக்கைகளை அர்ஜுனா பட்டைச் சாறு வெளிப்படுத்துகிறது. அதன் ஆண்டிபயாடிக் செயல்பாடு கிராம்-நேர்மறை பாக்டீரியாவுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலே கூறப்பட்ட நன்மைகள் தவிர, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது, இருமலை தடுக்கிறது மற்றும் அதிகப்படியான அமிலத்தன்மையினால் வயிற்றுப் புறணிக்கு தீங்கு விளையாமல் பாதுகாப்பதற்கும் மருத மரப் பட்டை உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், மருத்துவ ஆய்வுகள் இல்லாதிருப்பதால், மருத மரப் பட்டைகளின் இந்த பயன்களைப் பற்றி அதிகம் உறுதி செய்ய முடியாது.

இதயத்திற்கு மருத மரப் பட்டை மூலிகை - Arjuna herb for heart in Tamil

இதய நோய் மற்றும் ரத்த ஓட்டத்தடை இதய நோய் தாக்குதல்கள் போன்ற இதய நோய்களின் சிகிச்சைக்காக மருத மரப் பட்டை தூள், ஆயுர்வேத மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இது ஆபத்தை குறைப்பதில் மட்டுமல்லாமல், இதன் வழக்கமான நுகர்வு ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தையும் செயல்பாட்டையும் மேம்படுத்த உதவும்.

 இதய செயலிழப்பு மற்றும் இதய சம்பந்தமான நோய்களின் சிகிச்சைக்காக மருத மரத்தின் மரப்பட்டைகளின் செயல்திறனை சோதிப்பதற்காக பல விலங்கு சார்ந்த மற்றும் மருத்துவ ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. மருத மரத்தின் பட்டை ஃப்ளாவனாய்டுகள், டானின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரியல் சேர்மங்களை உள்ளடக்கியது, இவை ஒன்றாக சேர்ந்து, இதை ஒரு சிறந்த கார்டியோ பாதுகாப்பு மருந்தாக வேலை செய்ய வைக்கிறது என ஆராய்ச்சிகள் பரிந்துரைக்கின்றன.

ஒரு மருத்துவ ஆய்வில், 10 இதய நோயாளிகளுக்கு மூன்று மாத காலத்திற்கு பாரம்பரிய மருந்துகளுடன் சேர்த்து மருத மரத்தின் மரப்பட்டை தூள் வழங்கப்பட்டது, அதே நேரத்தில் ஒரு கட்டுப்பாட்டு குழுவிற்க்கு இதய நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சைமுறை மருந்துகள் மட்டுமே வழங்கப்பட்டது. 3 மாத காலத்திற்கு பிறகு, மருத பட்டை தூள் கொடுக்கப்பட்ட குழுவானது இருதய ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியது, அதுவும் குறிப்பாக இடது வென்ட்ரிக்லை (இதயத்தின் ஒரு பகுதி) வலுப்படுத்தியது தெரிய வந்தது.

மற்றொரு ஆய்வில், மருத மரப்பட்டை மற்றும் அஸ்வகந்தா காப்ஸ்யூல்கள் ஒரு வாரத்திற்கு 40 ஆரோக்கியமான மக்களுக்கு 8 வார காலத்திற்கு வழங்கப்பட்டன. 8 வாரங்கள் கழித்து,  அஸ்வகந்தா பொதுவாக இதய பலவீனத்தை குறைத்து, அர்ஜூனா பட்டை இருதயத்தின் பொறையுடைமையை அதிகரிக்க உதவியது என அனுசரிக்கப்பட்டது. கூடுதலாக, இது இதய திசுக்களின் மீதான அழுத்தத்தை குறைக்க உதவுகிற மற்றும் எந்த வயது அல்லது வாழ்க்கை முறை காரணமாக ஏற்படும் இதய தசைகளின் சரிவை குறைக்கும் ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு முகவர் மருத பட்டை  ஆகும். இருப்பினும், உங்களுக்கு தேவையான ஆயுர்வேத பட்டை தூளின் சரியான அளவை தெரிந்து கொள்ள உங்கள் ஆயுர்வேத மருத்துவரிடம் பேச எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது.

(மேலும் வாசிக்க: இதய நோய்களின் வகைகள் மற்றும் காரணங்கள்)

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.
Long Time Capsule
₹719  ₹799  10% OFF
BUY NOW

கொழுப்புக்கான மருத மூலிகை - Arjuna herb for cholesterol in Tamil

மருத மரத்தின் மரப்பட்டையின், ஹைப்போலிப்பிடிமிக் (கொலஸ்ட்ரால் குறைத்தல்) பண்புகளை சோதிக்க பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. மருத மரத்தின் பட்டை உடலில் லிபிட் (கொழுப்பு) சுயவிவரத்தை சமநிலைப்படுத்த உதவும் ஒரு சிறந்த முகவர் என்பதை விலங்கு மற்றும் மருத்துவ ஆய்வுகள் இரண்டும் உறுதிப்படுத்துகின்றன.

ஒரு ஆய்வில், கரோனரி இதய நோயால் பாதிக்கப்பட்ட 21 பேருக்கு 4 மாத காலத்திற்கு பாலுடன் கலந்து மருத பட்டை தூள் 1 கிராம் வழங்கப்பட்டது. அதில் மருத பட்டையின் பயன்பாடு உடலின் கொழுப்பு சேர்மானத்தை பராமரிப்பதில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தியதை கண்டறியப்பட்டது.

மேலும் ஆய்வுகள் மருத பட்டை எல்டிஎல் (கெட்ட கொழுப்பு) அளவை குறைக்கிறது என்று தெரிவிக்கின்றன. இதையொட்டி அதிரோஸ்கிளிரோஸ் (தமனிகளில் கொழுப்பு படிதல்) மற்றும்  பக்கவாதம் மற்றும் மாரடைப்புபோன்ற இருதய நோய்களின் ஆபத்துக்கள் குறைகிறது. எனவே, அர்ஜுனா பட்டை ஒரு ஹைப்போலிப்பிடிமிக்-காக பிரகாசமான எதிர்காலத்தை உடையது என்று சொல்ல பாதுகாப்பானது.

(மேலும் வாசிக்க: உயர் கொழுப்பு சிகிச்சை)

இரத்த அழுத்தத்திற்கான மருத மரப் பட்டை - Arjuna bark for blood pressure in Tamil

ஆயுர்வேத டாக்டர்களின் கூற்றுப்படி, மற்ற மூலிகைகளோடு இணைத்து சிகிச்சையளிக்கும்போது இரத்த அழுத்தத்தை பராமரிக்க மருத பட்டை மிகவும் பயனுள்ளதாகும். இரத்த அழுத்தத்தை குறைப்பதில் மருத மரப் பட்டையின் பயனை சோதிக்கும் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து இந்த ஆயுர்வேத கூற்று உண்மையாக இருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஒரு மருத்துவ ஆய்வில், CHF (இரத்த இதய செயலிழப்பு, இரத்தத்தை பம்ப் செய்ய இதயத்தால் இயலாமை) உடைய 10 நோயாளிகளுக்கு 4 கிராம் அர்ஜுனா பட்டை தூள், ஒரு நாளைக்கு இரண்டு முறை, ஒரு மாதத்திற்கு வழங்கப்பட்டது. ஒரு மாதத்தின் முடிவில், மூச்சுத்திணறல் அறிகுறிகளை குறைந்தும், சிஸ்டாலிக் மற்றும் டிஸ்டாலிக் இரத்த அழுத்தம் ஆகியவை கணிசமான குறைந்தும் இருந்தது.

உங்கள் உடல் வகைக்கு ஏற்ப மருத பட்டை தூளின் சரியான அளவை தெரிந்து கொள்ள உங்கள் டாக்டரிடம் சென்று பரிந்துரை பெற வேண்டும்.

(மேலும் வாசிக்க: உயர் இரத்த அழுத்த சிகிச்சை)

நீரிழிவுக்கான மருத பட்டை - Arjuna bark for diabetes in Tamil

விலங்கு சார்ந்த மாதிரிகள் மற்றும் ஆய்வக ஆய்வுகள் மருத மரப் பட்டை ஒரு சிறந்த இரத்தச் சர்க்கரைக் குறைபாட்டு (இரத்த சர்க்கரை குறைப்பு) முகவர் என்று கூறுகிறது. இரத்தத்தில் இருந்து குளுக்கோஸை எடுத்துகொள்ளும் அளவை மருத மரப் பட்டை அதிகரிக்கிறது மற்றும் குளுக்கோஸ் உற்பத்தியில் ஈடுபடும் சில நொதிகள் தடுக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கிறது.

இருப்பினும், மனித ஆய்வுகள் இல்லாத நிலையில், மனிதர்களுக்கு இந்த மரப் பட்டையின் நீரிழிவு நோய்களுக்கு எதிரான விளைவுகள் பற்றி அதிகம் உறுதி செய்ய முடியாது. 

(மேலும் வாசிக்க: நீரிழிவு சிகிச்சை)

இருமலுக்கான மருத மரப் பட்டை - Arjuna bark for cough in Tamil

மருத மரத்தின் பட்டைகளில் காணப்படும் இரசாயன கலவை அராபினோகாலாக்டன், இருமல் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெற உதவுவதாக மிருகங்கள் மீதான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், மனித ஆய்வுகள் இல்லாததால், மருத மரப் பட்டையின்  இருமல் அடக்கி (இருமல்-நிவாரணி) விளைவுகளை புரிந்து கொள்ள ஆயுர்வேத டாக்டரை சந்தித்து ஆலோசனை பெருவது சிறந்தது.

உறைதல் தடுப்பானாக மருத மரப் பட்டை - Arjuna bark as an anti-coagulant in Tamil

மருத மரப் பட்டை பற்றிய ஆராய்ச்சி ஒரு உறைதல் தடுப்பான் முகவராக (இரத்தம் உறைவு உருவாவதை நிறுத்துதல்) பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கின்றன. இந்த மருத மரப் பட்டை தட்டணுக்களின் திரட்டலை (உடலில் உறைவு-உருவாக்கும் செல்களை சேகரித்தல்) தடுக்கிறது அல்லது இரத்தம் உறைதலைத் தொடங்கும் சில சமிக்ஞையுடன் தலையிடுகிறது என்று மேலும் அந்த ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், அர்ஜுனா மரப்பட்டைகளின் எதிர்ப்போக்கான விளைவுகளை உறுதிப்படுத்த ஆய்வுகள் இன்னும் செய்யப்பட வேண்டும்.

இரத்தப்போக்கு கோளாறுகளுக்கு மருத மரப் பட்டை - Arjuna bark for bleeding disorders in Tamil

ஆயுர்வேதத்தில், மருத மரப் பட்டை இரத்தம் உறையாமை, வோன் வில்பிரண்ட் நோய், வழக்கத்திற்கு மாறான மற்றும் அடிக்கடி உள் காயம் மற்றும் இரத்தப்போக்கு, கடுமையான மாதவிடாய் காலம் மற்றும் இரத்த திட்டுக்கள் உருவாக்கம் போன்ற இரத்தப்போக்கு சீர்குலைவுகளுக்கு ஒரு மருந்தாக பரவலாக பயன்படுத்தப்படுகிறது

ஆயுர்வேத டாக்டர்களின் கூற்றுப்படி, மருத மரப் பட்டை ஒரு சிறந்த வெசோகன்ஸ்டிரக்டர் (இரத்த நாள குழல் சுருக்கி) ஆகும். இதனால் இரத்த கசிவு காரணமாக இரத்த இழப்பு ஏற்படுவதை குறைக்க இது வழிவகுக்கிறது. எனினும், மனிதர்களில் மருத மரப் பட்டையின் இந்த விளைவுகளை நிரூபிக்க எந்த தெளிவான ஆராய்ச்சியும் இல்லை.

வயிற்றுப் புண்களுக்கு மருத மரப் பட்டை - Arjuna bark for stomach ulcers in Tamil

மருத மரப் பட்டையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் மெத்தனால் சாறு வயிற்றில் உள்ள மியூகோசல் தடையை வலுப்படுத்துவதன் மூலம் வயிற்றுப் புண்களின் தீவிரத்தை குறைக்கிறது என்று விலங்கு ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ஆனால் மனித குலத்தின் மீது இதே போன்ற விளைவுகளை உறுதிப்படுத்த இதுவரை மனித ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, நீங்கள்  வயிற்று புண்களால் பாதிக்கப்பட்டிருந்தால், எந்த வடிவத்திலாவது மருத மரப் பட்டையை எடுத்து கொள்வதற்கு முன்பு உங்கள் ஆயுர்வேத மருத்துவரிடம் கேட்பது நல்லது.

எலும்பு முறிவுகளுக்கான மருத மரப் பட்டை - Arjuna bark for fractures in Tamil

திடீர் சக்தியாலோ அல்லது திடீர் அழுத்தம் காரணமாகவோ ஏற்படும் காயம் அல்லது  ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நிலைமைகளால் எலும்பு முறிவுகள் ஏற்படலாம் . சிகிச்சைக்கான பொது வரிசையில் எலும்பு மாற்றுகள் (உடைந்த எலும்புகளை குணப்படுத்தும் கரிம அல்லது செயற்கை பொருட்கள்) மற்றும் வளர்ச்சி காரணிகள் ஆகியவை அடங்கும். ஆனால், வளர்ச்சிக் காரணிகள் பக்க விளைவுகள் இல்லாமல் இருக்காது மற்றும் அவை மிக விலையுயர்ந்தவை. ஆயுர்வேத மருத்துவர்கள் ஒரு மருத மரப் பட்டை சாந்தை முறிவுகள் குணப்படுத்துவதற்கு பயன்படுத்துகின்றனர். மருத மரப் பட்டை சாறுகள் எலும்பு திசுக்களின் மீளுருவாக்கத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், மனித அடிப்படையிலான ஆய்வுகள் இல்லாததால், மருத மரப் பட்டையின் இந்த குணப்படுத்தும் பயனை உறுதிப்படுத்த கடினமாக உள்ளது.

ஆக்ஸிஜனேற்ற மருத மரப் பட்டை - Arjuna bark antioxidant in Tamil

மருத மரப் பட்டையின் ஆக்ஸிஜனேற்ற சாத்திய கூறுகளை சோதித்துப் பார்க்க பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன  ஆய்வக மற்றும் விலங்கு ஆய்வுகள் மருத மரப் பட்டையின் பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவில் கல்லீரலில் சூப்பர்ராக்ஸைட் டிக்டேஸ்ஸஸ், கேடலேஸ், வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ போன்ற ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பிகளை அதிகரிக்கிறது.

இருப்பினும், மனித உடலில் மருத மரத்தின் மரப்பட்டைகளின் ஆக்ஸிஜனேற்ற சாத்தியத்தை சோதிக்க இதுவரை எந்த மனித ஆய்வும் செய்யப்படவில்லை.

மருத மரப் பட்டை ஒரு ஆண்டிமைக்ரோபியலாக உள்ளது - Arjuna bark as an antimicrobial in Tamil

மருத மரப்பட்டையின் அக்யூனா மற்றும் அசிட்டோன் சாறு  பல்வேறு வகையான ஸ்ட்ராலோகோக்கஸ் ஆரியஸ் (பாக்டீரியாவின் ஒரு வகை) மற்றும் ஆண்டிபயாடிக் எதிர்ப்பு VRSA மற்றும் MRSA ஸ்டாஃபிலோகாக்கஸ் உட்பட பல நோய்களுக்கு எதிராக செயல்படுகின்றன.

மற்றொரு ஆய்வில், ஒரு பரந்த அளவிலான ஆண்டிபயாடிகாக இருப்பதால், மருத மரப்பட்டை சாறு சில வகையான பாக்டீரியா (கிராம் எதிர்மறை) க்கு எதிராக அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கலாம். இந்த விளைவுகளுக்கு மனித ஆய்வுகள் எதுவும் இல்லாதிருப்பதால், எந்தவொரு மருத்துவ நிலைக்கும் மருத மர பட்டையப் பயன்படுத்துவதற்கு முன் உங்கள் ஆயுர்வேத வைத்தியரிடம் சரிபார்க்க வேண்டும்.

மருத மரப் பட்டை  பொதுவாக தூள் செய்து தூள் வடிவில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆயுர்வேத மருத்துவர்கள் அதன் பல ஆரோக்கிய நலன்களுக்காக காப்ஸ்யூல்கள், மாத்திரைகள் மற்றும் அர்ஜூனா தேநீர் போன்ற பிற தயாரிப்புகளையும் பரிந்துரைக்கின்றனர்.

நீங்கள் ஏற்கனவே ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்பவராக  இருந்தால், அர்ஜுனா பாலை அல்லது க்ஷீர்பாகா பற்றி ஏற்கனவே நீங்கள் அறிந்திருக்கலாம். இது மருத மரப் பட்டை  தூள் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட ஒரு நன்கு அறியப்பட்ட ஆயுர்வேத மருந்து. ஆயுர்வேத மருத்துவர்களின் கூற்றுப் படி, க்ஷீர்பாகா ஒரு சிறந்த இதய டானிக் ஆகும். வீட்டிலேயே இந்த மருந்தைத் தயாரிப்பதற்கு ஒரு விரைவான வழிமுறை கீழே கொடுக்கபட்டுள்ளது:

  1. தண்ணீர், பால், மற்றும் மருத மரப் பட்டை ஆகியவற்றை 32: 8: 1 என்ற விகிதத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  2. அனைத்து நீரும் ஆவியாகும் வரை குறைந்த வெப்ப நிலையில் இந்த கலவையை சூடாக்கவும்.
  3. பின்பு இந்த கலவையை வடிகட்டி, அந்த வடி நீரை குடிக்கவும் (கதா / அர்ஜுனா பால்)

அர்ஜுனா மரம் மருந்தாக மட்டும் பயன்படுவது அல்லாமல், மர பலகைகள் மற்றும் எரிபொருளாகவும் அதே போல அலங்காரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. அர்ஜுன மர கிளைகள் ஒரு பரந்த விதானத்தை உருவாக்குகின்றன, அதனால் நிழலுக்கான சாலையோரங்களில் இந்த மரங்கள் நடப்படுகிறது. கிணறு போன்ற நீர் ஆதாரங்களுக்கு அருகே இந்த மரத்தை நடவு செய்வது காற்று மாசுபாட்டின் விளைவுகளை குறைப்பதற்கும், அந்த நீரை புதிதாக வைத்திருப்பதற்கும் உதவுவதாக நம்பப்படுகிறது.

மருத மரப் பட்டைத் தூள் 500 மி.கி. அளவுக்கு ஒரு வாரத்திற்கு சாப்பிடுவதால் அதிக பக்க விளைவுகள் எதுவும் இருக்காது. ஆனால், தனிமனிதனின் பல்வேறு உடல் மற்றும் உடலியல் காரணிகளைப் பொறுத்து பயன்படுத்த வேண்டிய அளவு மாறுபடும். எனவே, உங்கள் உணவு பழக்கத்தில் எந்த வடிவத்திலும் மருத மரப் பட்டையை எடுத்துக்கொள்வதற்கு முன் ஆயுர்வேத மருத்துவரிடம் சென்று அறிவுரை பெற பரிந்துரைக்கப்படுகிறது.

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Kesh Art Hair Oil by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to more than 1 lakh people for multiple hair problems (hair fall, gray hair, and dandruff) with good results.
Bhringraj Hair Oil
₹599  ₹850  29% OFF
BUY NOW
  1. கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மருத மரப் பட்டையின் தாக்கம் பற்றிய ஆராய்ச்சி எதுவும் இல்லை. எனவே, விஞ்ஞான சான்றுகள் இல்லாத நிலையில், நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் அல்லது குழந்தைக்குப் பாலூட்டுகிறீர்கள் என்றால், மருத மரப் பட்டைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
  2. டெர்மினியா இரத்த உறைவை குறைக்க கூடிய ஒரு மருந்து என்பதால், நீங்கள் இரத்தக் கசிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டியிருந்தாலோ , மருத மரப் பட்டையை தவிர்ப்பது சிறந்தது.
  3. மருத மரப் பட்டை ஒரு சக்தி வாய்ந்த இரத்த சர்க்கரை குறைப்பானாக இருப்பதால், உங்களுக்கு இயற்கையிலேயே குறைந்த ரத்த சக்கரை அளவு இருந்தாலோ அல்லது நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளியாக இருந்தாலோ, எந்தவொரு வடிவத்திலும் மருத மரப் பட்டையை சாப்பிடுவதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் பேசுவது சிறந்தது.
  4. இதுவரை மருத மரப் பட்டையினால் எந்த மருத்துவ குறுக்கீடும் அறியப்பட இல்லை ஆனால் நீங்கள் பரிந்துரைக்கப்பட்ட ஏதாவது ஒரு வகையான மருந்துகளை சாப்பிடுபவராக இருந்தால், மருத மரப் பட்டை தூளை பயன்படுத்துவதற்கு முன் உங்கள் ஆயுர்வேத மருத்துவரிடம் அது குறித்து ஆலோசனை பெறுவது சிறந்தது.

Medicines / Products that contain Arjuna

மேற்கோள்கள்

  1. Dwivedi S, Jauhari R. Beneficial effects of Terminalia arjuna in coronary artery disease. Indian Heart J. 1997 Sep-Oct;49(5):507-10. PMID: 9505018
  2. Shridhar Dwivedi, Deepti Chopra. J Tradit Complement Med. 2014 Oct-Dec; 4(4): 224–231. PMID: 25379463
  3. Maulik SK, Talwar KK. Therapeutic potential of Terminalia arjuna in cardiovascular disorders. Am J Cardiovasc Drugs. 2012 Jun 1;12(3):157-63. PMID: 22583146
  4. Maulik SK, Katiyar CK. Terminalia arjuna in cardiovascular diseases: making the transition from traditional to modern medicine in India. Curr Pharm Biotechnol. 2010 Dec;11(8):855-60. PMID: 20874682
  5. Sandhu JS et al. Effects of Withania somnifera (Ashwagandha) and Terminalia arjuna (Arjuna) on physical performance and cardiorespiratory endurance in healthy young adults. Int J Ayurveda Res. 2010 Jul;1(3):144-9. PMID: 21170205
  6. B. Ragavan, S. Krishnakumari. Antidiabetic effect ofT. arjuna bark extract in alloxan induced diabetic rats. Indian J Clin Biochem. 2006 Sep; 21(2): 123–128. PMID: 23105628
  7. Sivová V, Bera K, Ray B, Nosáľ S, Nosáľová G. Cough and Arabinogalactan Polysaccharide from the Bark of Terminalia Arjuna. Adv Exp Med Biol. 2016;935:43-52. PMID: 27334729
  8. Malik N, Dhawan V, Bahl A, Kaul D. Inhibitory effects of Terminalia arjuna on platelet activation in vitro in healthy subjects and patients with coronary artery disease. Platelets. 2009 May;20(3):183-90. PMID: 19437336
  9. Devi RS, Narayan S, Vani G, Shyamala Devi CS. Gastroprotective effect of Terminalia arjuna bark on diclofenac sodium induced gastric ulcer. Chem Biol Interact. 2007 Apr 5;167(1):71-83. Epub 2007 Feb 2. PMID: 17327128
  10. Devi RS et al. Ulcer protective effect of Terminalia arjuna on gastric mucosal defensive mechanism in experimental rats. Phytother Res. 2007 Aug;21(8):762-7. PMID: 17471603
  11. Shreya Mandal et al. Analysis of phytochemical profile of Terminalia arjuna bark extract with antioxidative and antimicrobial properties. Asian Pac J Trop Biomed. 2013 Dec; 3(12): 960–966. PMID: 24093787
Read on app