அத்திப்பழம் அல்லது அத்தி, உலகம் முழுவதும் அதன் சமையல் குணத்திற்கும் மற்றும் நோய்களுக்கு குணமளிக்கும் தன்மைகளுக்காகவும் போற்றப்படுகிற, மிகவும் பிரபலமான "கவர்ச்சியான" பழங்களில் ஒன்றாகும். இந்த இனிப்பான மற்றும் மொறுமொறுப்பான பழம், அதனுடைய சுவைக்காக மட்டும் பிரபலம் அடையவில்லை, அதனுடைய ஆரோக்கியம் அளிக்கும் நன்மைகளுக்காக, பல ஆயிரம் வருடங்களாகப் பயிர் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. உண்மையில், மனிதர்களால் பயிர் செய்யப்பட்ட மிகவும் பண்டைய காலப் பழங்களில் அத்தியும் ஒன்று ஆகும். இதனைப் பற்றிய குறிப்புகள் புனித நூலான பைபிளில் கூட குறிப்பிடப்பட்டுள்ளன. புதிய கற்கால சகாப்தத்தில் இருந்து இந்தப் பழத்தின் பழங்கால மாதிரிகள் கிடைக்கின்றன என்பதை நீங்கள் அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.

கிரேக்கர்கள் இதனை மிகவும் விலை மதிப்பற்றதாகக் கருதியதால், இதை ஏற்றுமதி செய்ய அனுமதிக்க மாட்டார்கள், மற்றும் எந்த ஒரு போட்டியிலும் வெற்றி பெறுபவருக்கு ஒரு கௌரவமாக இந்த அத்திப் பழத்தைக் கொடுத்தனர். இது மட்டும் அல்லாமல், ரோமானிய புராணக்கதை ரீமஸ் மற்றும் ரோமுலஸ் படி, ரோமை தோற்றுவித்தவர்கள், அத்தி மரத்தின் கீழ் பெண் ஓநாய் மூலம் பாலூட்டப்பட்டார்கள் எனக் கூறப்படுகிறது. அவர்கள், இந்தப் பழத்தின் கருவுறும் தன்மையை அதிகரிக்கும் பண்புகளையும் கூடக் குறிப்பிடுகிறார்கள். இந்த அதிசயமான பழத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள, தொடர்ந்து படிக்கவும்.

அத்தியைப் பற்றிய சில அடிப்படை உண்மைகள்:

  • தாவரவியல் பெயர்ஃபிகுஸ் கேரிகா
  • குடும்பம்: மோரகயயி/ மல்பெர்ரி குடும்பம்
  • பொதுப் பெயர்கள்: அத்திப்பழம், பொது அத்தி, அத்தி/அஞ்சிர்
  • சமஸ்கிருதப் பெயர்: அஞ்சிர், அஞ்சீரா
  • பயன்படும் பாகங்கள்: பழம், இலைகள், மரப்பட்டை, மற்றும் வேர்கள்
  • சொந்த பிராந்தியம் மற்றும் புவியியல் பரவுதல்: அத்தி மரம், இந்தியா, சீனா, மற்றும் ஆப்பிரிக்கா உட்பட உலகின் பெரும்பாலான வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் வளர்க்கப்பட்டாலும் கூட, அதன் சொந்த பிராந்தியம், மத்திய தரைக்கடல் மற்றும் ஆசியாவின் மேற்கத்திய நிலப்பகுதிகள் என நம்பப்படுகிறது. அத்தி மரம் அமெரிக்காவில் மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் கூட வளர்க்கப்படுகின்றன. உலகின் மிக பெரிய அத்தி உற்பத்தியாளர் துருக்கி ஆகும்.
  • ஆற்றலியல்: குளிர்ச்சியடைதல்

அத்தி மரம்:

அத்தி மரம் ஒரு இலையுதிர் (ஒரு வருடத்திற்கு ஒருமுறை இலைகளை உதிர்க்கிற) மரம் ஆகும், மற்றும் மல்பெர்ரி, ஆல மரம் (பர்காட்) மற்றும் "பீப்பல்" ஆகியவற்றை உள்ளடக்கிய, அரச மர தாவர பேரினத்தின் அங்கத்தினர்களில் ஒன்று ஆகும்.

உங்களுக்குத் தெரியுமா?

அத்தி மரங்கள் வழக்கத்துக்கு மாறாக, ஒரு உண்மையான பழத்துக்குப் பதிலாக அதிக மலர்களைக் கொண்டிருக்கும் அதனால், ஒருவர் ஒரு அத்தி செடியில் அதிக அளவில் மலர்களைக் காண முடியும். அத்தி மரங்கள் வளர்ப்பதற்கு மிகவும் எளிதானவை, மேலும் ஒரு முறை நடப்பட்ட உடன், அவை சுற்றுப்புறத்தில் உள்ள தாவரங்களின் செறிவை மிகவும் விரைவாக எடுத்துக் கொள்ளும். உள்ளபடியே பார்த்தால், "களைகளின் உலக அளவிலான தொகுப்பில்" உள்ள நச்சுத்தன்மை மிக்க களைகளையும் உள்ளடக்கியதாக இது இருந்திருக்கிறது. பொதுவாக, ஒரு அத்தி மரம் 20-30 அடிகள் உயரமாகவும், ஏறத்தாழ அதற்கு சமமான அகலத்திலும் வளர இயலும். இலைகள் மடல்களைக் கொண்டவை, மேலும் அவை, அரச மர இனத்தின் (அத்தி மற்றும் மல்பெரியை உள்ளடக்கிய ஆனால் அவற்றோடு மட்டுமே முடிந்து விடாத, ஒரு மரங்களின் தொகுப்பு) பல்வேறு வகைகளை வேறுபடுத்தி பார்க்க உதவும், அடிப்படை விதிகளில் ஒன்றாகவும் இருக்கிறது.

  1. அத்தியின் ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள் - Health benefits of Anjeer in Tamil
  2. அத்தியை எவ்வாறு உண்பது - How to eat Anjeer in Tamil
  3. ஒரு நாளுக்கு எத்தனை அத்திப்பழங்கள் எடுத்துக் கொள்வது - How many figs (Anjeer) to take per day in Tamil
  4. அத்தியின் (அத்திப்பழங்களின்) பக்க விளைவுகள் - Side effects of Anjeer (Figs) in Tamil

அத்தி, சமையலறைகளிலும் மற்றும் குளிரூட்டிகளிலும் தனது வழியை மிக நன்றாகக் கண்டறிந்து கொள்கிறது. இந்தப் பழத்தின் இனிய மொறுமொறுப்புத்தன்மையை, உண்மையிலேயே ஏதேனும் உணவுக்குப் பின் அருந்தும் பதார்த்தங்களில் நீங்கள் சேர்க்கும் பொழுது, அதன் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் சார்ந்த நன்மைகளும், இந்த பழத்தினால் அதிகரிக்க மட்டுமே செய்கின்றன. உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு, அத்தி நன்மையளிப்பதாக இருக்கும் வழிகளில் சிலவற்றை நாம் ஆராயலாம்.

  • மலச்சிக்கலில் இருந்து நிவாரணம்அளிக்கிறது: அத்தி ஒரு நல்ல அளவில் உணவு சார்ந்த நார்ச்சத்தினைக் கொண்டிருக்கின்றது. இந்த நார்ச்சத்து, உங்கள் குடல்களில் உள்ள உணவுக்கு திரட்சியை சேர்க்கிறது, மேலும் மலத்தை இளக்குகிறது, அதன் மூலம் உடலில் இருந்து அவை எளிதாக வெளியேற்றப்பட, வசதியான நிலையை உருவாக்குகிறது. மேலும் கூடவே இது, மலச்சிக்கலுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றான மலம் கழித்தலை முறைப்படுத்த உதவுகிறது.
  • எடையைக் குறைக்க உதவுகிறதுஅத்திப்பழங்கள், நார்ச்சத்து நிறைந்த, கலோரிகள் குறைவான பழங்கள் ஆகும், அவை உங்கள் கலோரிகள் எண்ணிக்கையை அதிகரிக்காமலே, நீண்ட நேரத்துக்கு உங்கள் வயிறு நிரம்பி இருப்பது போன்றே உங்களை உணரச் செய்கின்றன. ஒரு சிறந்த உடல் எடைக் குறைப்பு உணவில், இதைத் தவிர உங்களுக்கு வேறு என்ன வேண்டும்? இருந்தாலும், பாலுடன் எடுத்துக் கொள்ளப்படும் போது, பதிலாக உடல் எடையை அதிகரிக்க இது காரணமாகக் கூடும். 
  • கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது: அத்திப்பழங்கள், கண் பார்வையை பராமரிக்க மற்றும் கண்பார்வை இழப்பைத் தடுக்கும் பொறுப்பை உடைய, ஒரு ஊட்டச்சத்தான வைட்டமின் ஏ- வை ஏராளமான அளவில் கொண்டு இருக்கின்றன. இது மட்டும் அல்லாமல், தற்போதைய காலத்தில் குணப்படுத்த இயலாததாக இருக்கின்ற, சீர் குலைவு கண் குறைபாடுகளின் அபாயத்தை இவை குறைப்பதாகவும் கூடவும் நம்பப்படுகிறது. மேலும் அறிந்து கொள்ள ஒரு மருத்துவரிடம் பேசுவது மிகவும் நல்லது.
  • இரவில் ஒரு நல்ல உறக்கத்தை வழங்குகிறது: உங்கள் உறக்க-விழிப்பு சுழற்சிகளை முறைப்படுத்துகிற மற்றும் உறக்கமின்மை பிரச்சினையை கையாள உதவுகிற, மெலட்டோனின் உற்பத்தியை உடலில் அதிகரிக்க, அத்திப்பழங்கள் உதவுவதாக ஆராய்ச்சி சான்றுகள் தெரிவிக்கின்றன. கூடவே அது, உங்கள் மூளையில் செரோட்டொனின் அளவுகளையும் அதிகரிக்கிறது. இது மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைத்து நீங்கள் நன்கு உறங்க உதவுகிற மகிழ்ச்சி ஹார்மோன் ஆகும்.
  • மூல நோயிலிருந்து விடுதலையை வழங்குகிறது: மலம் கழித்தலை முறைப்படுத்தல் மற்றும் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிப்பதன் மூலமாக, அத்திப்பழங்கள், உங்கள் மூல திசுக்களின் மீதான அதிகப்படியான அழுத்தத்தில் இருந்து நிவாரணம் பெற உதவுகின்றன. மலத்தை இளக்கி மற்றும் அவை எளிதாக வெளியேற்றப்பட உதவுவதன் காரணமாக, அது மலக்குடல் அல்லது மலவாயில் எரிச்சலை ஏற்படுத்தாது, அதனால் மூல நோய் வராமல் தடுக்கப்படுகிறது.
  • கல்லீரல் செயல்பாட்டினை மேம்படுத்துகிறது: அத்திப்பழங்கள், ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகள் மற்றும் ஊட்டச்சத்து மூலப்பொருட்களின் ஒரு களஞ்சியத்தைக் கொண்டிருக்கின்றன. முந்தைய ஆய்வுகள், இந்த மூலப்பொருட்கள், கல்லீரல் சேதத்தைத் தடுக்கின்றன மற்றும் கல்லீரலின் நச்சுக்களை நீக்கும் திறனை அதிகரிக்கின்றன எனத் தெரிவிக்கின்றன. இருப்பினும், மனிதர்கள் மீது பயன்படுத்தும் அளவுகள் மற்றும் விளைவுகளை உறுதி செய்ய, மேலும் அதிக ஆய்வுகள் தேவைப்படுகின்றன.
  • மிகச் சிறந்த ஆக்சிஜனேற்ற எதிர்ப்பி: ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகள் என்பவை, அடிப்படைக் கூறுகளின் சேதத்தை தடுத்து முதுமை அடைவதைத் தாமதப்படுத்துகின்ற மூலப்பொருட்கள் ஆகும். ஒரு இயற்கையான ஆக்சிஜனேற்ற எதிர்ப்பி என்ற வகையில், முதுமை தொடர்பான உறுப்புகள் செயல்பாடு மோசமடைதலைத் தடுக்கவும், அதே நேரத்தில், சுருக்க கோடுகள் மற்றும் கரும்புள்ளிகள் போன்ற முதுமைக்கு முன்பாக தோன்றக் கூடிய அறிகுறிகளைக் குறைக்கவும் உதவுகின்றன.
  • இரத்த சோகை உள்ளவர்களுக்கு நன்மையளிக்கிறது: அத்திப்பழங்கள், இரும்புச்சத்துக்கான ஒரு நல்ல ஆதாரம் ஆகும். தொடர்ச்சியாக அத்திப் பழங்களை உட்கொள்வது, உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவையும் இரத்த சிகப்பு அணுக்களையும் அதிகரிக்க உதவுவதன் வழியாக, இரும்புச்சத்து குறைபாட்டு இரத்த சோகையைத் தடுக்க மிகவும் பயனுள்ளது எனக் கண்டறியப்பட்டு உள்ளது.
  • இரத்த சர்க்கரை அளவுகளைக் கட்டுப்படுத்துகிறது: ஆராய்ச்சிகள், அத்திப்பழத்தின் ஹைபோகிளைசெமிக் (இரத்த சர்க்கரையை குறைத்தல்) செயல்பாட்டினை நிரூபிக்கின்றன. இது இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது மற்றும் உங்கள் இரத்த ஓட்டத்தில் இருந்து அதிகப்படியான சர்க்கரையை உள் வாங்கிக் கொள்வதை மேம்படுத்துகிறது, அதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் உதவுகிறது.
  • சருமத்துக்கு நன்மை அளிக்கிறது: அத்திப்பழங்கள், உங்கள் சருமத்துக்கான ஊட்டச்சத்து மற்றும் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகளின் ஒரு நல்ல ஆதாரத்தை வழங்குகின்றன. இது அடிப்படைக் கூறு சார்ந்த சேதத்தை குறைத்து உங்கள் சருமத்தை, அதிக மிருதுவாக மற்றும் இளமையாகத் தோன்ற செய்கிறது. பருக்களை நீக்குவதில் கடுங்குளிர் சிகிச்சை அளவுக்கு, அத்தி மரப்பால் பூசுதலும், நன்மை வாய்ந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.
  • முடி உதிர்வைத் தடுக்கிறது: உங்கள் சருமத்தைப் போன்றே, அத்திப்பழங்கள் உங்கள் உச்சந்தலைக்கும் ஊட்டம் அளிக்கின்றன. வைட்டமின் இ மற்றும் கே ஆகியவற்றின் ஒரு நல்ல ஆதாரமாக இருப்பதால், அது உங்கள் முடியின் இயற்கையான பளபளப்பைப் பராமரிக்க உதவுகிறது, முடி வெள்ளையாவதைத் தடுக்கிறது மற்றும் அதிகப்படியான முடி உதிர்வையும் கூடக் குறைக்கிறது.
  • இருமல் மற்றும் ஜலதோஷ நிவாரணி: பாரம்பரியமாக, அத்திப்பழ சாறு, இருமல் மற்றும் ஜலதோஷத்துக்கான ஒரு மிகச் சிறந்த நிவாரணியாக அறியப்படுகிறது. இது, உங்கள் நுரையீரல்கள் மற்றும் சுவாசப் பாதைகளில் இருந்து சளியை வெளியேற்றுவதில் உதவுவதோடு மட்டும் அல்லாமல், உங்கள் தொண்டை தசைகளை வலுவாக்குவதற்கும் கூட இது உதவுகிறது மற்றும் அந்த பிரச்சினை மறுபடி வருவதையும் தடுக்கிறது.
  • இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது: இரத்த அழுத்தத்தின் மீது, அத்திப் பழம் உட்கொள்வதால் ஏற்படும் சாதகமான விளைவுகளை ஆய்வுகள் காட்டி இருக்கின்றன. அத்தி, உங்கள் இதயத்தின் மீதான சோடியத்தின் எதிர்மறையான விளைவுகளை சமன் செய்ய உதவுகின்ற, ஒரு தாதுப் பொருளான பொட்டாசியத்தைக் கணிசமான அளவு கொண்டிருக்கிறது. 
  • சிறுநீரக செயல்பாட்டினை மேம்படுத்துகிறது: அத்திப்பழங்கள், சிறுநீரை அதிகரிக்கும் தன்மைகளைக் கொண்டிருப்பதாக அறியப்படுகின்றன. உங்களை அதிகம் சிறுநீர் கழிக்க வைப்பதன் மூலம், சிறுநீரகத்துக்கு நன்மை அளிக்கக் கூடிய வகையில், உங்கள் உடலில் இருந்து அதிகப்படியான நச்சுக்களை வெளியேற்ற அவை உதவுகின்றன. 
  • காய்ச்சலைக் குறைக்கிறது: மருத்துவ ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டு இருப்பதன் படி, அத்தி இலைகளின் எத்தனால் கலந்த சாறு, ஒரு வலுவான காய்ச்சலைத் தணிக்கும் செயல்பாட்டினை வெளிப்படுத்துகின்றது. 5 மணி நேரங்களுக்கும் மேல், செயல் வினையில் நீடிப்பதால், இதன் செயல்பாடு, பெரும்பாலான வணிக ரீதியிலான காய்ச்சல் தணிப்பான்களை விட அதிக சக்தி வாய்ந்தது எனக் கூறப்படுகிறது.  
  • உறுதியான எலும்புகளுக்காக அத்திப்பழங்கள்: அத்திப்பழங்கள், எலும்பு அமைப்பினை பராமரிப்பதற்கான பொறுப்பையுடைய, 3 மிகவும் முக்கியமான தாதுப் பொருட்களைக் கொண்டிருக்கின்றன. அவை கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் ஆகியவை ஆகும். தொடர்ந்து அத்திப்பழங்களை உட்கொண்டு வருவது உங்கள் எலும்புகளை உறுதியாக வைத்திருக்கிறது மற்றும் எலும்பு முறிவுகள் அபாயத்தைக் குறைக்கிறது. 
  • கர்ப்பிணி பெண்களுக்கு நன்மை அளிக்கக் கூடியது: அத்திப்பழத்தின் ஊட்டச்சத்து மிக்க தன்மைகள், அதனை, கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு பொருத்தமான உணவுக்கு மேல் சேர்க்கை உணவாக ஆக்குகிறது. இந்தப் பழத்தில் இருக்கின்ற வைட்டமின் பி, ஆரம்ப கட்ட கர்ப்ப நிலையில் ஏற்படும் காலை நேர பலவீனத்தில் இருந்து விடுபட உதவுவதாக அறியப்படுகிறது மற்றும் இதன் கால்சியம் சத்துக்கள், மகப்பேறு எலும்புகள் பலவீனம் அடைவதில் இருந்து பாதுகாக்கிற அதே நேரத்தில், கருவின் வளர்ச்சியிலும் கூட உதவுகிறது.

ஆக்சிஜனேற்ற எதிர்ப்பியாக அத்திப்பழங்கள் - Figs (Anjeer) as antioxidant in Tamil

இளமை மற்றும் பிரகாசமாகத் தோற்றம் அளிக்க வேண்டும் என விரும்பும் நபர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், உங்களுக்கு ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகள் பற்றி தெரிந்து இருக்கக் கூடும்.அவை உடலில் இருந்து அடிப்படைக் கூறு சார்ந்த நச்சுக்களை (உடலுக்கு நச்சான தீமை தரும் ஆக்சிஜன்) துப்புரவு செய்வதில் உதவுவதோடு மட்டும் அல்லாமல், அவை, இதயம் மற்றும் கல்லீரல் போன்ற பல்வேறு உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதிலும் மிகவும் பயன்மிக்கதாக இருக்கின்றன. அத்திப்பழங்களில் இருக்கின்ற பீனால்ஸ் மற்றும் ஃபிளவானோய்ட்ஸ் (இயற்கையில் கிடைக்கின்ற ஒரு வகை வேதியியல் மூலப்பொருள்) ஆகியவை, அத்திப்பழத்தை ஒரு அற்புதமான ஆக்சிஜனேற்ற எதிர்ப்பியாக்குகின்றன என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கும் மேலாக, ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகள், உடலில் நச்சுத்தன்மை அழுத்தத்தை குறைக்கின்றன மற்றும் முன்கூட்டியே தோன்றும் முதுமைத் தோற்றம் உட்பட, வயது தொடர்பான அதிக அளவிலான பிரச்சினைகளையும் குறைக்கின்றன.

(மேலும் படிக்க: ஆக்சிஜனேற்ற எதிர்ப்பி நிறைந்த உணவு)

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.
Long Time Capsule
₹719  ₹799  10% OFF
BUY NOW

கர்ப்ப காலத்துக்காக அத்தி - Anjeer for pregnancy in Tamil

அத்திப்பழங்களின் அதிக அளவிலான ஊட்டச்சத்து பண்புகள், அதனைக் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் பரிந்துரைக்கப்படும் உணவுகளில் ஒன்றாக மாற்றி இருக்கின்றன. அது, இந்த நேரத்தில், அவர்களுக்கு ஏற்படும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் அதிகப்படியான தேவையைப் பூர்த்தி செய்ய உதவுகிறது. முதலில், கருவில் இருக்கும் சிசுவின் வளர்ச்சிக்கு மற்றும் தாயின் எலும்பு ஆரோக்கியத்தைப் பராமரிக்க, மிகவும் தேவைப்படுகிற தாதுக்களில் ஒன்றான சுண்ணாம்பு சத்தின் ஒரு நல்ல ஆதாரமாக அத்திப்பழங்கள் இருக்கின்றன. அடுத்தபடியாக, இந்தப் பழத்தில் இருக்கும் வைட்டமின் பி கூறுகள், கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களில் ஏற்படும் காலை நேர பலவீனத்தை சமாளிக்க அவர்களுக்கு உதவுகின்றது. இருப்பினும், அளவுக்கு அதிகமாக உண்பது தவிர்க்கப்பட வேண்டும், மேலும், அத்திப்பழத்தை ஒரு மருந்து அல்லது கஷாயமாக எடுத்துக் கொள்ள நீங்கள் எண்ணினால், உங்கள் மருத்துவரிடம் முறையான அளவுகள் குறித்து பேசுவது எப்போதும் மிகவும் நல்லது.

எலும்புகளுக்காக அத்தி - Anjeer for bones in Tamil

எலும்புகள் உடலின் அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்குகின்றன, மேலும் ஒரு நல்ல எலும்புகள் ஆரோக்கியத்தைப் பராமரிப்பது, வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள். துரதிர்ஷ்டவசமாக, நம் வயது அதிகமாக ஆக, எலும்புகளில் இருந்து, இயற்கையாகவே சுண்ணாம்பு சத்து குறையத் தொடங்குகிறது. இதனால், நமது உடலின் இயற்கையான சுழற்சி, எலும்புகள் பலவீனமாக வளர்வதற்கும் மற்றும் உடைதல் மற்றும் தேய்மானத்தினால் அதிக அளவு பாதிக்கப்படுவதற்கும், எளிதானதாக ஆக்குகிறது. அதன் விளைவாக, நமது முதுமைப் பருவத்தில் நாம் எலும்பு முறிவுகளால் பாதிக்கப்படுகிறோம் மற்றும் எலும்பு தேய்மானம் போன்ற வியாதிகளும் வரக் கூடும். அதிர்ஷ்டவசமாக, நமது உணவுடன் பிற்சேர்க்கையாக சுண்ணாம்பு சத்தினை எடுத்துக் கொள்வதன் மூலமாக, நமது எலும்புகள் முதுமை அடைவதைத் தவிர்க்க மற்றும் தாமதப்படுத்த நம்மால் இயலும். சந்தையில் எல்லா இடத்திலும், மிக அதிகமான வணிக ரீதியிலான சுண்ணாம்பு சத்து பிற்சேர்க்கைப் பொருட்கள் கிடைக்கின்ற அதே வேளையில், உடலில் அளவுக்கு அதிகமான சுண்ணாம்பு சத்து படிவங்கள் மற்றும் கற்களை உருவாக்கும் சாத்தியங்கள் உள்ள, சில சிறிய பக்க விளைவுகளை அவை கொண்டு இருக்கின்றன. உங்கள் எலும்புகள் மற்றும் பற்களை நீண்ட காலத்துக்கு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, உங்கள் உணவுடன் சேர்த்து ஒரு இயற்கையான சுண்ணாம்பு சத்து ஆதாரமாக இருக்கும் அத்திப்பழங்களை எடுத்துக் கொள்வது, அவற்றை விட மிக அதிக அளவில் நன்மை மிக்கதாக இருக்கும். அத்திப்பழத்தில் இருக்கும் சுண்ணாம்பு சத்தின் அளவு வெண்ணை எடுக்கப்பட்ட பாலில் (28 கிராம்கள் அளவுள்ள அத்திப்பழங்கள், உங்கள் தினசரி சுண்ணாம்பு சாது தேவையில் 5% பூர்த்தி செய்வதாகக் கூறப்படுகிறது) இருக்கும் சுண்ணாம்பு சத்துக்கு சமமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அத்திப்பழங்கள், சுண்ணாம்பு சத்துடன் கூடவே, எலும்புகளை செறிவூட்டும் மற்ற இரண்டு தாதுக்களான மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றையும் அதிக அளவில் கொண்டிருக்கின்றன.

அத்தி காய்ச்சலைக் குறைக்கிறது - Anjeer reduces fever in Tamil

ஆயுர்வேதத்தில், அத்தி இலைகள் ஒரு அறியப்பட்ட காய்ச்சல் தணிப்பியாக (உடல் வெப்பம் மற்றும் காய்ச்சலைக் குறைக்கிற) இருக்கின்றன. சமீபத்தில், அத்தி இலைகளில் இருந்து எடுக்கப்படும் எத்தனால் சாறு, அந்த சாற்றின் அளவைப் பொருத்தவாறு, சக்தி வாய்ந்த காய்ச்சல் தணிப்பு குணங்களைக் கொண்டிருக்கின்றன என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன் தாக்கம், மிகவும் வழக்கமான வணிக காய்ச்சல் தணிப்பிகளை விட மிக அதிக அளவில், 5 மணி நேரங்கள் வரையில் நீடிப்பது எடுத்துக் காட்டப்பட்டு இருக்கிறது.

(மேலும் படிக்க: காய்ச்சலுக்கான காரணங்கள் மற்றும் சிகிச்சை)

சிறுநீரகங்களுக்கான அத்தியின் நன்மைகள் - Anjeer benefits for kidneys in Tamil

அத்திப்பழங்கள் இயற்கையான சிறுநீர் பிரிப்பு ஊக்கியாக இருப்பதாக அறியப்படுகின்றன, அதாவது, அவை உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுகின்றன மற்றும் சிறுநீரகத்தில் இருந்து அதிகப்படியான உப்புக்கள் மற்றும் தண்ணீரை வெளியேற்றுகின்றன. அதன் மூலம் சிறுநீரகத்தை ஆரோக்கியமாகவும் மற்றும் உடலை நச்சுக்களில் இருந்து பாதுகாப்பாகவும் வைக்கின்றன. நச்சுக்கள் அற்ற ஒரு உடல் சிறப்பாக செயல்படுவது மட்டும் அல்லாமல், கூடவே அது முதுமை பெறுதலும் மென்மையாக நடைபெறுகிறது.

இரத்த அழுத்தத்துக்காக அத்தி - Anjeer for blood pressure in Tamil

உயர் இரத்த அழுத்தம் என்பது, இன்றைய நாட்களில் நீங்கள் கடந்து செல்லக் கூடிய மிகவும் பெரும்பாலான பிரச்சினைகளில் ஒன்று ஆகும். ஒரு காலத்தில் நடுத்தர வயதினருக்கு ஏற்படும் ஒரு பிரச்சினையான இது, இன்றைய காலகட்டத்தில், உலகம் முழுவதும் உள்ள, அனைத்து வயதுப்பிரிவினர் மற்றும் பாலினத்தவர்களிடையே அதிகமாக காணப்படுவதாக மாறி இருக்கிறது. பெரும்பாலான நபர்களுக்கு, மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணமாக இருக்கின்ற வேளையில்; வாழ்க்கைமுறை பிரச்சினைகள், உடல் பருமன் மற்றும் உணவுத் தேர்வுகள் ஆகியவை இதில் ஒரு பெரும் பங்கு வகிக்கின்றன, உப்பு மற்றும் காரம் அதிகம் நிறைந்த உணவுகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வது உடலில் உள்ள சோடியம் உப்பின் அளவை அதிகரிக்கிறது, அதனால் நமது உடலில் உள்ள உப்புக்களின் அளவுகளில் ஒரு சமமின்மையை உருவாக்குகிறது. உடலின் சோடியம் உப்பு அளவுகளை சீர்படுத்துவது பொட்டாசியம் ஆகும். தொடர்ந்து அத்திப்பழங்களை உட்கொண்டு வருவது, பொட்டாசியத்தின் ஒரு நல்ல ஆதாரம் என ஆய்வுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன. அது இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் மிகவும் நன்மை மிகுந்ததாக இருக்கிறது. இந்தப் பழம், உடலில் இரத்த அழுத்த அளவுகளை இயல்பான அளவில் பராமரிக்கத் தேவையான, மிக முக்கியமான தாதுக்களில் ஒன்றான பொட்டாசியத்தை அதிக அளவில் கொண்டிருக்கிறது.

நுரையீரல் பிரச்சினைகளுக்காக அத்தி - Anjeer for lung problems in Tamil

அத்திப்பழ சாறு இருமல் மற்றும் ஜலதோஷத்துக்கு எதிரான ஒரு நிவாரணமாக அறியப்படுகிறது. ஆயுர்வேதத்தில், அத்திப்பழ சாறு அருந்துவது, தொண்டையில் இருந்து அதிகப்படியான சளியை வெளியேற்றுகிறது மற்றும் தொண்டை தசைகளுக்கு ஊட்டச்சத்தினை வழங்குகிறது என அறியப்படுகிறது. அதனால், அத்தி, உங்களுக்கு தொண்டை வலியில் இருந்து நிவாரணம் அளிப்பது மட்டும் அல்லாமல், அந்தப் பிரச்சினை மறுபடி வரவதைத் தடுக்க போதுமான அளவுக்கு, உங்கள் தொண்டையை வலிமைப்படுத்தவும் உதவுகிறது. இந்தப் பண்புகள் இணைந்திருப்பதால், அத்திப்பழங்கள், நாள்பட்ட இருமல்கள் மற்றும் அது போன்ற மற்ற சுவாசம் சார்ந்த பிரச்சினைகளுக்கு எதிரான ஒரு திறன்வாய்ந்த காரணியாக இருக்கின்றன.

முடி உதிர்வுக்காக அத்தி - Anjeer for hair loss in Tamil

அத்திப்பழங்களின் ஊட்டம் மிக்க மற்றும் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு விளைவுகள், பெரும்பாலான உச்சந்தலை பிரச்சினைகளைக் கையாள்வதில் நன்மை தருவதாக இருப்பதோடு மட்டும் அல்லாமல், அது முடிகளுக்கும் ஊட்டமளித்து அவற்றை நன்கு சீரமைக்கவும் செய்கிறது. அத்தி விதை எண்ணையை மேற்பூச்சாகப் பயன்படுத்துவது, உங்கள் முடிகளின் இயற்கையான பளபளப்பைப் பராமரிக்க மற்றும் முடி உதிர்வு ஏற்படுவதைத் தடுக்கத் தேவையான மிகவும் முக்கியமான வைட்டமின் இ மற்றும் வைட்டமின் கே ஆகியவற்றை உங்கள் முடிகளுக்கு வழங்குவதாக அறியப்படுகிறது.

சருமத்துக்கான அத்தியின் நன்மைகள் - Anjeer benefits for skin in Tamil

அத்திப்பழங்கள், சொரியாஸிஸ், முகப்பரு மற்றும் சிரங்கு போன்ற தோல் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் உள்ள அதன் நன்மைகளுக்காக, பாரம்பரிய மற்றும் நாட்டு மருத்துவ நடைமுறைகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. மேல்பூச்சாக அவற்றைத் தடவும் பொழுது, அவை தோலின் மீது ஒரு ஊட்டம் மிக்க மற்றும் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு விளைவைக் கொண்டிருக்கின்றன. ஈரானில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு, மருக்களுக்கு சிகிச்சை அளிப்பதில், அத்திப்பழத்தின் பாலை மேற்பூச்சாகத் தடவுவது, கடுங்குளிர் சிகிச்சை (மிகவும் குறைந்த வெப்பநிலைக்கு உறைய வைத்து, பின்னர் அதனை வெட்டி எடுப்பது) போன்ற நிவாரணத்தைக் கொடுப்பதாகத் தெரிவிக்கிறது. செயல்படும் விதத்தின் சரியான முறை தெரியாமல் இருக்கிறது, ஆனால், மருக்களைத் திறம்பட நீக்குவதில் பெரும் பங்குடைய, சில புரதச்சிதைவு (புரதங்களை நொறுக்குதல்) செயல்பாடுகளை அத்தி பால் கொண்டிருப்பதாக அறிவியலாளர்கள் நம்புகிறார்கள்.

நீரிழிவுக்காக அத்தி - Anjeer for diabetes in Tamil

அத்திப்பழத்தினை உண்பது, இரத்த சர்க்கரை அளவுகளைக் குறைப்பதில் உதவிகரமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்திப்பழங்களின் மேல் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சி, இந்தப் பழத்தினை தொடர்ந்து உட்கொண்டு வருவது, சர்க்கரை மீது இன்சுலினின் உணர்திறனை அதிகரிக்கிறது, மற்றும் அதன் மூலம் இரத்தத்தில் இருந்து அதிக அளவு சர்க்கரை எடுத்துக் கொள்ளப்படுகிறது என சுட்டிக் காட்டுகிறது. இருந்தாலும், உங்கள் மருத்துவரிடம், குறிப்பாக நீங்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தால், பரிசோதித்துக் கொள்வது மிக நல்லது.

இரத்த சோகைக்காக அத்தி - Anjeer for anemia in Tamil

ஒரு சமீபத்திய ஆய்வின் படி, இந்தியாவில் உள்ள, 15-50 வயது கொண்ட பெண்களில் 51% அளவுக்கு இரத்த சோகை கொண்டவர்களாக உள்ளனர். இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணிகளில் ஒன்று, உணவில் இரும்புச்சத்து குறைபாடு இருப்பதே ஆகும். அத்திப்பழங்கள், ஹீமோகுளோபின் (உடலுக்குள் ஆக்சிஜனை பரிமாற்றம் செய்ய உதவுகிற, இரத்த அணுக்களில் காணப்படும் மூலக்கூறு) உடைய முக்கியமான அங்கங்களில் ஒன்றான இரும்புச்சத்து நிறைந்த ஒரு ஆதாரம் ஆகும். தொடர்ந்து அத்திப்பழங்களை உட்கொண்டு வருவது, இரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க மற்றும் இரத்த அணுக்களின் எண்ணிக்கையில் ஒரு பொதுவான அதிகரிப்பையும் ஏற்படுத்த வழிவகுக்கிறது, என ஆய்வுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன. இந்தப் பழத்தில் அடங்கியுள்ள புரதம் மற்றும் வைட்டமின் பி ஆகியவையும் இரத்தத்தின் சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் ஒரு பெரும் பங்கு வகிக்கின்றன.

(மேலும் படிக்க: இரத்த சோகை வகைகள்)

ஒரு ஆரோக்கியமான கல்லீரலுக்காக அத்தி - Anjeer for a healthy liver in Tamil

அத்திப்பழங்கள், உடலில் ஏற்படும் எந்த ஒரு வகையான ஆக்சிஜனேற்ற பாதிப்பிற்கும் எதிராக பாதுகாக்கின்ற, உடலின் சிறந்த எதிர்ப்பு சக்தியான ஆக்சிஜனேற்றம் எதிர்ப்பிகளின், ஒரு சிறந்த ஆதாரமாகும். அதன் ஊட்டச்சத்து பண்புகளுடன் இணைந்து, அத்திப்பழங்கள் கல்லீரலில் இருந்து நச்சுக்களை நீக்க மற்றும் கல்லீரலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. விலங்குகள் மீது நடத்தப்படும் ஆய்வுகள், இந்தப் பழத்தின் கல்லீரலைப் பாதுகாக்கும் திறன்களை நிரூபித்திருக்கின்றன, ஆனால் மனிதனின் கல்லீரல் மீதான இதன் விளைவுகளுக்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை. அதனால், உங்கள் கல்லீரல் மீதான அத்திப்பழத்தின் நேரடி விளைவுகளைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் கேட்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மூல நோய்க்காக அத்தி - Anjeer for piles in Tamil

மூல நோய் என்பது மலம் கழித்தலின் போது வலி மற்றும் இரத்தப் போக்கினை ஏற்படுத்தக் காரணமாகிற, மலத்துவாரம் உள்ளே மற்றும் அதனை சுற்றி ஏற்படுகிற அழற்சியைக் குறிக்கிற ஒரு பிரச்சினையாகும். இந்த பிரச்சினைக்கான சரியான காரணம் தெளிவில்லாமல் இருக்கிறது. ஆனால், குறைவான நார்ச்சத்து உடைய உணவை உண்பதும் மற்றும் முறையற்ற மலம் கழிக்கும் பழக்கமும் மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்றாகும். அத்திப்பழங்கள் இந்த இரண்டுக்குமே தீர்வினைக் கொண்டிருக்கின்றன.அத்திப்பழங்களில் இருக்கின்ற அதிக அளவிலான நார்ச்சத்து மலம் கழித்தலை முறைப்படுத்தி, மலத்தினை இளக்கி, அதனால் மலத்துவாரத்தின் வழியாக அது எளிதாக வெளியேற உதவுகிறது. மலக்குடலில் கொடுக்கப்படும் அழுத்தத்தைக் குறைக்கிறது.

உறக்கத்துக்காக அத்தி - Anjeer fo sleep in Tamil

இரவில் தூங்க முடியவில்லையா? நீங்கள் தூக்கத்தைப் பெற இயலாமையால் (தூக்கமின்மை) பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? நமது உடலின் தூக்க/விழிப்பு சுழற்சிகளைப் பராமரிப்பது, மெலட்டோனின் (ஒரு வகை ஹார்மோன்) உடைய பொறுப்பு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த ஹார்மோனில் ஏற்படும் சமநிலையின்மை தூங்கும் பாங்கினை பாதிப்பதற்கு மட்டும் காரணம் ஆகாமல், மேலும் பதற்றமாக உணருதல் மற்றும் எளிதாக எரிச்சலடைதல் போன்றவற்றுக்கும் கூட வழிவகுக்கக் கூடும். அத்திப்பழங்கள், உடலில் மெலட்டோனின் அளவுகளை அதிகரிப்பதில் நேரடியான ஒரு விளைவைக் கொண்டிருக்கக் கூடிய, அமினோ அமில ட்ரிப்டோபன்- க்கான ஒரு நல்ல ஆதாரம் ஆகும். தொடர்ந்து அத்திப்பழங்களை உட்கொண்டு வருவது, உடலில் ட்ரிப்டோபன் அளவுகளை அதிகரிக்க வழிவகுக்கவும், அதன் மூலம் "தூக்க ஹார்மோன்" என மிகவும் சரியாக அழைக்கப்படுகிற மெலட்டோனின், சரியான நேரத்துக்கு வெளியிடப்படுவதைத் தூண்டவும் காரணமாகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தூங்க செல்லும் முன்பாக, ட்ரிப்டோபன் எடுத்துக் கொள்வது, மெலடோனின் அளவை சமநிலையில் வைக்க மற்றும் அதன் மூலம் நீங்கள் மேலும் எளிதாகத் தூங்குவதற்கு உதவுகிறது என எண்ணற்ற ஆய்வுகள் கூறுகின்றன.

இதற்கும் மேலாக, அத்திப்பழங்கள் மக்னீசியம் சத்தும் நிறைந்தவை, மருத்துவர்களின் கருத்துப்படி, மக்னீசியம் சத்து, இரவில் நீண்ட மற்றும் சிறந்த தூக்கத்தைப் பெற மிகவும் உதவிகரமானது ஆகும். அவ்வளவு தான் என நீங்கள் நினைக்கும் பொழுது, உங்கள் மூளையில் நேரடியாக செயல்படுகிற மற்றும் உங்களுக்கு ஒரு அமைதி மற்றும் மகிழ்ச்சியான உணர்வைத் தருகின்ற, செரோடோனின் என அழைக்கப்படும் மகிழ்ச்சியை அதிகரிக்கும் ஹார்மோனைத் தூண்டக்கூடிய ஒன்றாகவும், ட்ரிப்டோபன் செயல் புரிகிறது..

மேலும் கூடுதலாக, அத்திப்பழங்கள், மகிழ்ச்சியை அதிகரிக்கும் பண்புடையது என மருத்துவர்களால் கருதப்படும் இயற்கை சர்க்கரைகளை அதிக அளவில் கொண்டிருக்கின்றன. ஒரு நல்ல அளவிலான செரோடோனின் அளவுகள் இருப்பது, மனப்பதற்றம் மற்றும் மன அழுத்தம் போன்ற நரம்பு சார்ந்த பிரச்சினைகளைத் தவிர்க்க மிக அவசியமானது என அறியப்படுகிறது.

கண்களுக்கான அத்தியின் நன்மைகள் - Anjeer benefits for eyes in Tamil

அத்திப்பழங்கள், கண்பார்வையைப் பராமரிக்கவும் மற்றும் கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் பொறுப்புடைய, மிகவும் முக்கியமான ஊட்டச்சத்தான வைட்டமின் ஏ- வுக்கான ஒரு நல்ல ஆதாரம் என அறியப்படுகின்றன. தொடர்ந்து அத்திப்பழங்களை உட்கொண்டு வருவது கண்களுக்கு நல்லது என நம்பப்படுவது மட்டும் அல்ல, தற்போதைய காலத்தில் குணப்படுத்த முடியாததாக இருக்கக் கூடிய, கண்களின் விழித்திரையின் செல்கள் இறப்பதன் காரணமாக ஏற்படக் கூடிய, படிப்படியாகப் பார்வை இழப்பை ஏற்படுத்துகின்ற கருவிழி சிதைவு போன்ற, முதுமை அடைவதன் காரணமாக தோன்றக் கூடிய கண்களின் குறைபாடுகள் ஏற்படுவதை தாமதப்படுத்துவதிலும், இவை உதவுவதாக அறியப்படுகிறது.

எடைக் குறைப்புக்காக அத்தி - Anjeer for weight loss in Tamil

அத்திப் பழங்களில் உள்ள அதிக அளவிலான நார்ச்சத்து குடல்களில் திரட்சியாக இருக்கும் மற்றும், ஒரு மிக நீண்ட அளவிலான நேரத்துக்கு, வயிறு நிரம்பியிருப்பதைப் போன்ற உணர்வை உங்களுக்குத் தரும். இது உங்கள் உணவு அருந்துதல்களுக்கு இடையே உள்ள நேர இடைவெளியை அதிகரித்து, நீங்கள் குறைவாக உணவு உண்ண உதவும். கூடவே, அத்திப்பழங்கள் குறைவான கலோரிகளைக் கொண்டவை, எனவே, உங்களுக்கு வயிறு நிரம்பியிருப்பதைப் போன்ற உணர்வைக் கொடுத்தாலும் கூட, அவை உங்கள் கலோரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது கிடையாது. இதைப் போன்ற நல்ல சுவையான மற்றும் உங்கள் உடைகளை ஒரே இரவில் உங்களுக்கு மிகவும் இறுக்கமாக ஆக்காத, ஒரு உணவினை நாம் எல்லோரும் கனவு காணவில்லையா. இருப்பினும், அத்திப்பழங்கள் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை, பால் உடன் எடுத்துக் கொள்ளப்படும் போது, அது உடல் எடை அதிகரிப்புக்கும் வழிவகுக்கக் கூடும். அத்திப்பழங்களை உட்கொள்ளுவதற்கு முன்பாக, குறிப்பாக நீங்கள் உடல் பருமன் உள்ளவராக இருந்தால், உங்கள் மருத்துவரை ஒரு முறை ஆலோசிப்பது நல்லது.

(மேலும் படிக்க: எடை குறைப்புக்கான உணவுப் பழக்க அட்டவணை)

மலச்சிக்கலுக்காக அத்தி - Anjeer for constipation in Tamil

அத்திப்பழங்கள், உணவு சார்ந்த நார்ச்சத்து மிக்க ஒரு சிறந்த ஆதாரமாகும் மற்றும் ஒரு நார்ச்சத்து-மிகுந்த உணவின் மிகவும் முக்கியமான நன்மை என்னவெனில், அது உணவுக்கு திரட்சியை சேர்த்து மலத்தை இளகச் செய்து, அதன் மூலம் உடலில் இருந்து மலத்தை எளிதாக வெளியேற்ற உதவுகிறது. எனவே, ஒரு கிண்ணம் அத்திப்பழங்கள் துண்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள் மற்றும் மலச்சிக்கல் சோகத்தை பல மைல்கள் தூரத்துக்கு தள்ளி வையுங்கள்.

அத்திப்பழங்களை எவ்வாறு பயன்படுத்துவது?

அத்திப்பழங்கள், மரத்திலிருந்து அவை பறிக்கப்பட்ட உடனே, புதியதாக பயன்படுத்தக் கூடியவை ஆகும். ஆனால் புதிதான அத்திப்பழங்கள் கிடைப்பதும் அவற்றை சேமித்து வைப்பது மிகவும் வழக்கமானதாக இல்லை. இதனால், பதப்படுத்தப்பட்ட அல்லது உலர் வடிவில் உள்ள உணவாக பெரும்பாலும் உட்கொள்ளப்படுகின்றன.

புதிய பழம் சிறிதளவு சாறு நிரம்பியதாக இருப்பதாக அறியப்படுகிற வேளையில், உலர்ந்த பழம் இனிப்பாக, மெல்லக்கூடியதாக இருக்கிறது, மற்றும் அதன் விதைகள், ஒவ்வொரு கடியையும் சுவைமிகுந்ததாக ஆக்குகின்ற, ஒரு தனித்துவமான மொறுமொறுப்பை வழங்குகிறது. ஒரு நோய் நீக்கும் பழத்தின் அற்புதமான சுவையை விடச் சிறந்தது எது. உங்கள் தினசரி நடைமுறையில் அத்திப்பழங்களை சேர்ப்பதற்கான வழிகளை நீங்கள் தேடிக் கொண்டு இருந்தால், உலர் அத்திப்பழங்கள் தனியாக அல்லது காய்கறி கூட்டுடன் அலலது காலை தானியங்கள் அல்லது சோளத்துடன் சேர்த்து எடுத்துக் கொள்ளப்பட முடியும் என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். அதை, பால் அல்லது மற்ற பழங்களுடன் சேர்த்து பானங்கள் அல்லது பால் பானம் தயாரிக்கவும் அல்லது உங்களுடைய அல்வா, கேக்குகள், ரொட்டி, புட்டுகள் ஆகியவ்ற்றுடனும் சேர்த்து பயன்படுத்தவும் முடியும். அது, மிட்டாய்களின் பலவித வடிவங்களில் சந்தையிலும் கிடைக்கின்றது, மேலும் நீங்கள் அருந்தும் அதிக அளவிலான காஃபிக்கு மாற்றாக எடுத்துக் கொள்ள விரும்பினால், அத்திப்பழங்கள், உடனடி காஃபி பொட்டலங்களாக, வியாபார ரீதியிலான விற்பனையிலும் கிடைக்கின்றன. அத்திப்பழத்தின் இனிப்பு சுவை, பதார்த்தங்களுக்கு இயற்கையான இனிப்புத்தன்மையை வழங்குவதன் மூலம், அதனை நிறைவான ஒன்றாக ஆக்குகிறது.

இருந்தாலும், நீங்கள் சந்தையில் இருந்து அத்திப்பழங்களை வாங்கினால், அதன் மீது உள்ள காகிதத்தில் உள்ளவற்றைக் கவனமாகப் படிப்பதையும் மற்றும் அதன் காலாவதி தேதி மற்றும் சேர்க்கப்பட்டுள்ள பதப்படுத்திகளைப் பார்ப்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

உலர் அத்திப்பழம் அல்லது புதிய அத்திப்பழம்?

நீர் இழப்பு மற்றும் நீரில் கரையக் கூடிய சில ஊட்டச்சத்துக்களைத் தவிர்த்து, உலர்ந்த மற்றும் புதிய அத்திப்பழங்களின் ஊட்டச்சத்து தரங்களுக்கு இடையே பெரிய அளவிலான வேறுபாடுகள் இல்லை. உண்மையில், அத்திப்பழங்கள் உலர்ந்த வடிவில் எடுத்துக் கொள்ளப்படும் பொழுது, ஒரு சிறந்த ஊட்டச்சத்து பிற்சேர்க்கையாக இருப்பதாக அறியப்படுகிறது. உலர் அத்திப்பழங்களில் உள்ள பனோலிக் உள்ளடக்கங்கள் மற்றும் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு தன்மைகள், புதிய அத்திப்பழத்தில் உள்ளதை விட மிக அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டு உள்ளது.

அத்திப்பழத்தை புதியதாக வாங்குதல்:

நீங்கள் அத்திப்பழத்தை சந்தையிலிருந்து புதியதாக வாங்கப் போவதாக இருந்தால், மொத்த அத்திப்பழத்திலும் நசுங்கி இல்லாமல் இருப்பதை சோதித்து, நிறத்தில் பொலிவான அத்திப்பழங்களைத் தேர்ந்தெடுங்கள். புதிய அத்திப்பழங்கள் அதிக அளவிலான சர்க்கரைகளையும் மற்றும் அதிக அளவிலான நீரையும் கொண்டிருக்கின்றன. எனவே வாங்கிய இரண்டு நாட்களுக்குள் அவற்றை உட்கொள்வது விரும்பத்தக்கதாக இருக்கிறது. ஏதேனும் ஒரு கசப்பான சுவை அல்லது பூசணம் பிடித்து இருப்பதை நீங்கள் கவனித்தால், அந்த அத்திப்பழத்தை உட்கொள்ளாதீர்கள். புதிய பழங்கள், எளிதாக நசுங்கும் அளவுக்கு மென்மையாகவும் வாய்ப்புள்ளதாகவும் இருப்பதால், அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் முக்கியமானது ஆகும்.

நீங்கள் பழுக்காத அத்திப்பழங்களைக் கூட வாங்கி, நீங்கள் அவற்றை உட்கொள்ளும் முன்னர், அவற்றை அறை வெப்பநிலையில் இயற்கையாக பழுக்க விடவும் இயலும். ஒரு குளிர்ந்த மற்றும் உலர்ந்த இடத்தில் சேமிக்கப்படும் பொழுது, அறை வெப்பநிலையில், குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு இருப்பதால், உலர்ந்த அத்திப்பழங்கள், பழுக்காத அத்திப்பழங்களை விடக் கொஞ்சம் நீடித்து இருக்க முடியும். நீங்கள் ஒரு வெப்பமான மற்றும் ஈரப்பதம் மிக்க ஒரு தட்பவெப்ப நிலையில் வசிக்கிறீர்கள் என்றால், உலர்ந்த அத்திப்பழங்களை குளிரூட்டியில் வைப்பது நல்லது. அதில், அவை 6-8 மாதங்கள் வரை நீடித்து இருக்கும். இருந்தாலும், ஏதேனும் ஒரு கெட்ட வாடை அல்லது பூசணம் வளர்வதை நீங்கள் கவனித்தால், அவற்றை நீக்கி விடுவது நல்லது.

பொருத்தமானதாக, அதிக பக்க விளைவுகள் இல்லாமல் ஒரு நாளுக்கு, 3-5 அத்திப்பழங்கள் அல்லது 40 கிராம்கள் எடுத்துக் கொள்ள இயலும். ஆனால், உங்கள் உடல் அமைப்பு, வயது மற்றும் பாலினத்தைப் பொறுத்து உங்களுக்குப் பொருந்தக் கூடிய அளவினை அறிய, உங்கள் ஆயுர்வேத மருத்துவரை ஆலோசிப்பது அறிவுறுத்தப்படுகிறது.

தயிர் மற்றும் அத்திப்பழம் கலந்த ஒரு களிம்பை, ஒரு புத்துணர்ச்சியான மற்றும் மிகவும் உயிர்ப்புள்ள தோற்றமுள்ள சருமத்தைப் பெறுவதற்காக மேற்பூச்சாக தடவ இயலும்.

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Kesh Art Hair Oil by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to more than 1 lakh people for multiple hair problems (hair fall, gray hair, and dandruff) with good results.
Bhringraj Hair Oil
₹599  ₹850  29% OFF
BUY NOW
  • சில நபர்கள், இயற்கையாக அத்திப்பழங்களிடம் ஒவ்வாமை உள்ளவர்களாக இருக்கிறார்கள். அத்திப்பழம், அதன் மலமிளக்கும் தன்மைகள் காரணமாக, மலச்சிக்கலுக்கு நிவாரணம் அளிப்பதில் மிகவும் திறன்மிக்கது, ஆனால், அளவுக்கு அதிகமாக அத்திப்பழங்களை எடுத்துக் கொள்வது வயிற்றுப்போக்கு ஏற்படக் காரணமாகக் கூடும்.
  • நீங்கள் ஏற்கனவே ஏதேனும் இரத்த மெலிதாக்கி மருந்துகளை எடுத்துக் கொண்டு இருந்தால், உங்கள் உணவில் எந்த ஒரு அளவிலும் அத்திப்பழத்தை எடுத்துக் கொள்ளும் முன்னர், உங்கள் மருத்துவரிடம் ஆலோசிப்பது அறிவுறுத்தப்படுகிறது. ஏனென்றால், அத்திப்பழங்களில் காணப்படும் வைட்டமின் கே ஒரு இயற்கையான இரத்த மெலிதாக்கி என்பதால், அந்த மருந்துகளின் விளைவுகள் உடன் சேர்ந்து அதிகரித்து மேலும் அதிகமாக இரத்தத்தை மெலிதாக்குவதற்கு வழிவகுக்கக் கூடும்.
  • அத்தி இலை, மேற்பூச்சாகத் தடவப்படும் பொழுது தோலின் உணர்திறனை அதிகரிக்கக் கூடும். வெயிலில் வெளியே செல்வதற்கு முன்னர், அத்தி இலை களிம்பினைத் தடவாமல் இருப்பது அறிவுறுத்தப்படுகிறது.
  • அத்திப்பழம், உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவுகளைக் குறைக்கிறது. எனவே, நீங்கள் ஒரு நீரிழிவினால் பாதிக்கப்பட்ட, ஏற்கனவே இரத்த சர்க்கரையைக் குறைக்க மருந்துகள் எடுத்துக் கொண்டு இருப்பவராகவோ அல்லது பொதுவாகவே நீங்கள் குறைந்த இரத்த சர்க்கரை அளவுகளைக் கொண்டிருப்பவராகவோ இருந்தால், அத்திப்பழங்களை உட்கொள்வதற்கு முன்னர் உங்கள் மருத்துவரிடம் ஆலோசிப்பது மிகவும் அறிவுறுத்தப்படுகிறது.
  • அத்திப்பழம் ஒரு இயற்கையான இரத்த மெலிதாக்கியாகும். எனவே, நீங்கள் ஒரு அறுவை சிகிச்சை செய்து கொள்ளப் போகிறவராகவோ, அல்லது சமீபத்தில் ஒரு அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தாலோ, இரண்டு வாரங்களுக்கு அத்திப்பழம் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர், அத்திப்பழத்தை எடுத்துக் கொள்வதை மறுபடியும் தொடரலாமா என்பதை, உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள். அத்திப்பழம், சிறுநீரகத்தில் இருந்து அதிகப்படியான நச்சுக்களை வெளியேற்ற மிகவும் சிறந்ததாக இருக்கின்ற வேளையில், அது ஆக்சலேட்டுகள்( இயற்கையாகத் தோன்றும் ஒரு வகை உயிரியல் கலவை) நிறைந்ததாகவும் இருக்கிறது. இந்த ஆக்சலேட்டுகள், பெரும்பாலான சிறுநீரக மற்றும் பித்தப்பை கற்களுக்கான முக்கிய காரணியாக இருப்பதாக அறியப்படுகிற, சுண்ணாம்பு ஆக்சலேட்டை உருவாக்க, உடலில் உள்ள சுண்ணாம்புச் சத்துடன் இணைகிறது. ஆகவே, அத்தியை உட்கொள்ளும் பொழுது, நிதானமான போக்கைப் பின்பற்ற வேண்டியது அவசியம் ஆகும்.

Medicines / Products that contain Figs

மேற்கோள்கள்

  1. Russo F1, Caporaso N, Paduano A, Sacchi R. Phenolic compounds in fresh and dried figs from Cilento (Italy), by considering breba crop and full crop, in comparison to Turkish and Greek dried figs.. J Food Sci. 2014 Jul;79(7):C1278-84. PMID: 24888706
  2. Sergio D. Paredes, et al. Melatonin and Tryptophan Affect the Activity–Rest Rhythm, Core and Peripheral Temperatures, and Interleukin Levels in the Ringdove: Changes With Age. J Gerontol A Biol Sci Med Sci. 2009 Mar; 64A(3): 340–350. PMID: 19211547
  3. Glenda Lindseth, Brian Helland, Julie Caspers. The Effects of Dietary Tryptophan on Affective Disorders. Arch Psychiatr Nurs. 2015 Apr; 29(2): 102–107. PMID: 25858202
  4. Simon N. Young. How to increase serotonin in the human brain without drugs. J Psychiatry Neurosci. 2007 Nov; 32(6): 394–399. PMID: 18043762
  5. Inam QU1, Ikram H1, Shireen E1, Haleem DJ2. Effects of sugar rich diet on brain serotonin, hyperphagia and anxiety in animal model of both genders.. Pak J Pharm Sci. 2016 May;29(3):757-63. PMID: 27166525
  6. National Institute of Arthritis and Musculoskeletal and Skin Diseases [Internet]. National Institute of Health; Healthy Bones Matter.
Read on app