காப்புப் பிறழ்ந்த அதிர்ச்சி - Anaphylactic Shock in Tamil

Dr. Rajalakshmi VK (AIIMS)MBBS

January 17, 2019

October 29, 2020

காப்புப் பிறழ்ந்த அதிர்ச்சி
காப்புப் பிறழ்ந்த அதிர்ச்சி

காப்புப் பிறழ்ந்த அதிர்ச்சி என்றால் என்ன?

காப்புப்பிறழ்ச்சி என்பது ஒரு கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவு ஆகும். இது உயிருக்கு ஆபத்தானதாகும். மற்றும் இது வேர்கடலை அல்லது தேனீ கொட்டுக்கள் போன்ற ஒரு ஒவ்வாமையின் வெளிப்பாட்டிற்கு பிறகு உடனடியாக ஏற்படுகிறது. இந்த நிலையில், ஒரு நபர் ஒரு ஒவ்வாமைக்கு ஆட்பட்டும்போது, நோய் எதிர்ப்பு அமைப்பு செயல்படுத்தப்படுகிறது, இதன் விளைவாக இரசாயனத்தை அதிக அளவில் வெளிப்படுத்தி, இது இரத்த அழுத்தத்தை (ஹைபோடென்ஷன்) திடீரென வீழ்ச்சியடையச் செய்து, காற்றுச் சுழற்சிகளின் ஒடுக்கம் மற்றும் மூச்சுத் தடுப்புக்கு வழிவகுக்கிறது. சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால், காலப்போக்கில், இது காப்புப்பிறழ்ச்சி அதிர்ச்சி என்று சொல்லக்கூடிய அதிர்ச்சி நிலைக்கு முன்னேறலாம்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

காப்புப் பிறழ்ந்த அதிர்ச்சியின் அறிகுறிகள் பின்வருமாறு:

  • குறைந்த இரத்த அழுத்தம்.
  • கிறக்கம் அல்லது மயக்க உணர்வு.
  • பலவீனமான மற்றும் விரைவான நாடித்துடிப்பு.
  • வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் / அல்லது வாந்தி.
  • நாக்கு மற்றும் தொண்டையில் வீக்கத்துடன் ஸ்வாசப்பாதையில் அடைப்பு ஏற்படுவதினால் மூச்சுத்திணறல் உண்டாகிறது  (சீட்டியடிப்பது அல்லது ஆரவாரம் போன்ற ஒலி எழுப்புவது ) மற்றும் சுவாச கோளாறுகள்.
  • அரிப்பை தரக்கூடிய  படை நோய் (அறியப்படாத காரணங்கள் அல்லது ஏதேனும் ஒவ்வாமைக்கு தோலின் எதிர்ச்செயல் ), புடைப்புகள் அல்லது சிவந்த தோல்.

காப்புப் பிறழ்ந்த அதிர்ச்சியின் நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

அந்நிய மூலக்கூறுகளுக்கு எதிராக நோய் எதிர்ப்பு மண்டலத்தால் வெளியிடப்படும் ஆண்டிபாடி , உடலினை பாதுகாக்க தேவையான முக்கியமான ஒன்றாகும். எனினும், சில தனிநபர்களிடம், இந்த அந்நிய பொருட்களுக்கு எதிராக  அதிக அளவில் தோன்றும் ஆண்டிபாடியினால் ஒவ்வாமை ஏற்படுகிறது . பொதுவாக, இவை உயிருக்கு ஆபத்தை விளைவிக்காது என்றாலும் , ஒவ்வாமை தீவிரமாகும் பட்சத்தில், இது காப்புப் பிறழ்ந்த அதிர்ச்சியை உண்டாக்க கூடும்.

காப்புப்பிறழ்ச்சியின் பொதுவான காரணங்கள் பின்வருமாறு:

  • நுண்ணுயிர் எதிர்ப்பிகள், ஆஸ்பிரின் மற்றும் அதிகப்படியான வலி நிவாரணிகள் கொண்ட பல்வேறு மருந்துகள்.
  • இமேஜிங் சோதனைகளின் போது இன்ட்ராவீனஸ் கான்ஸ்ட்ராஸ்ட்  (ஐ.வி) சாயங்கள் பயன்படுத்துதல்.
  • தேனீக்களின் கொடுக்குகள் , மின்மினி பூச்சுகள் , மஞ்சள் உறை, குளவிகள் மற்றும் மலைக்குளவிகள்.
  • இரப்பர் மரப் பால்/லேடெக்ஸ்.

குழந்தைகளிடம் தென்படும் காப்புப்பிறழ்ச்சியின் பொதுவான காரணங்கள் பின்வருமாறு:

உணவு ஒவ்வாமை, மற்றும் பின்வருவன

  • பால்.
  • மீன் மற்றும் கிளிஞ்சல்.
  • வேர்கடலை.
  • மர கொட்டைகள்.

காப்புப்பிறழ்ச்சியின் அசாதாரணமான காரணங்களில் சில பின்வருமாறு

  • மெது ஓட்டம்/ஜாகிங் போன்ற ஏரோபிக் உடற்பயிற்சி.
  • சில உணவுகளை உட்கொண்டபின்னர் உடற்பயிற்சி செய்தல்.
  • சூடான, ஈரப்பதமான அல்லது குளிர் காலநிலையில் உடற்பயிற்சி செய்தல்.
  • சில நேரங்களில் காப்புப்பிறழ்ச்சியின் காரணம் தெரியாமல் இருக்கும்; இது இடியோபாட்டிக் காப்புப்பிறழ்ச்சி (காரணமறியா நோய்)  என அழைக்கப்படுகிறது.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

உங்களுடைய ஒரு பொது வரலாற்றை மருத்துவர் எடுத்துக் கொண்டு, உங்களின் ஒவ்வாமை எதிர்வினை குறித்த முந்தைய அனுபவங்களை பற்றி விரிவாக கேட்பார். ஒவ்வாமையின் மூலத்தைப் புரிந்து கொள்ள, மேற்கூறிய காரணங்களை  உள்ளடக்குகின்ற, ஒவ்வொரு ஒவ்வாமை மூலத்தைப் பற்றியும்  தனித்தனியாக கேட்பார். மேலும், நோயறிதலை உறுதிப்படுத்த, நொதி (டிரிப்டேசை) அளவீடு செய்ய உதவும் ஒரு இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். காப்புப்பிறழ்ச்சியின் பின்னர், அந்த நிலை மூன்று மணிநேரம் வரை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர் விளைவு/அலர்ஜி தூண்டுதல் சோதனைகள் பல்வேறு தோல் அல்லது இரத்த சோதனைகளை உள்ளடக்குகின்றது.

காப்புப்பிறழ்ச்சியின் தாக்குதலின் போது, ​​அறிகுறிகள் மோசமடைவதை தடுக்க, உடனடி மற்றும் விரைவான நடவடிக்கை தேவைப்படுகிறது. நாடித் துடிப்பு (பலவீனமாதா அல்லது விரைவானதா என்பதை அறிதல்), தோல் (வெளிறிய, குளிர்ந்த அல்லது மிகுந்த ஈரம் உள்ளதா என்பதை அறிதல்), ஏதாவது சுவாசப் பிரச்சனை (இருப்பின்), குழப்பம் அல்லது நினைவிழப்பு போன்ற உடனடி கவனம் தேவைப்படுகின்றவற்றை எச்சரிக்கையாய் கவனிக்க வேண்டும். சுவாசம் அல்லது இதய துடிப்பு நின்றுவிட்ட நபர்களுக்கு மீளுயிர்புச் சுவாசத்துடன் (சி.பி.ஆர்) மருந்தூட்டம்  கொடுக்கப்படுகின்றது. அவை பின்வருமாறு:

  • ஒவ்வாமைக்கு உடலில் ஏற்படும் எதிர்ச்செயலை குறைக்கும் எபிநெப்ரின் (அட்ரினலின்).
  • சுவாசிக்க உதவும் ஆக்ஸிஜன்/பிராணவாயு.
  • காற்றுச் செல்வழி அழற்சியானது நரம்பு வழியாகச் செலுத்தப்படுகிற (IV) ஒவ்வாமை பாதிப்பு நீக்க மருந்து/ஆண்டிஹிஸ்டமின்கள் மற்றும் கார்ட்டிஸோன்/மேற்சிறுநீரக சுரப்பிக் கணநீர் ஆகியவற்றின் பயன்பாட்டால் குறைக்கப்படுகிறது; இதனால் சுவாசத்தை ஊக்குவிக்கிறது.
  • அழ்புத்தேறோல் அல்லது பிற பீட்டா-இயக்கிகளின் பயன்பாட்டால் மூச்சுத்திணறல் அறிகுறிகள் தீர்ந்துவிடுகின்றன.
  • அவசரநிலை ஏற்படும் போது, நோயாளியை கிழே படுக்க வைக்க வேண்டும், அவரது கால்களால் உயர்த்தப்பட வேண்டும், மேலும் ஒரு தன்னியக்க உட்செலுத்தி (ஒரு ஒற்றை மருந்தளவை உட்செலுத்தக்கூடிய மறைமுக ஊசி கலவையுடனான மருந்தூசி) மூலம் எபினெஃப்ரின் ஊசியை போட வேண்டும். இது காப்புப் பிறழ்ந்த அதிர்ச்சியின் அறிகுறிகள் மோசமாவதைத் தடுக்க உதவுகிறது.
  • நீண்ட கால சிகிச்சையில் நோய் எதிர்ப்பு சிகிச்சையும் அடங்கும், இது தொடர்ச்சியான ஒவ்வாமை காட்சிகளை உள்ளடக்குகிறது. பூச்சிக் கொட்டுக்கள் காப்புப்பிறழ்ச்சிக்கான தூண்டுதலாக இருக்கும் பட்சத்தில், இது பயன்படுத்தப்படுகிறது, இது உடலின் ஒவ்வாமை எதிர்விளைவை குறைக்க உதவுகிறது. இது எதிர்காலத்தில் கடுமையான விளைவுகள் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது.



மேற்கோள்கள்

  1. Ministry of Health, Israel. Anaphylactic reaction. State of Israel
  2. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Anaphylactic shock
  3. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Anaphylaxis
  4. Department of health. Anaphylaxis. Government of Western Australia[internet].
  5. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Anaphylaxis